Friday 25 September 2015

தமிழ் காமிக்ஸ் உலகம்: முதல் நிகழ்வு

டியர் காமிரேட்ஸ்,

ஒருவழியாக அந்த நாளும் வந்து விட்டது. ஆமாம், நாளைக்கு தமிழ் காமிக்ஸ் உலகில் முதன்முறையாக திரு டிராட்ஸ்கி மருது அவர்களின் தலைமையில் ஒரு நிகழ்ச்சி முழுக்க முழுக்க காமிக்ஸ் மற்றும் கிராபிஃக் நாவல்களைப்பற்றி நடக்க உள்ளது.


நாளைய நிகழ்வில்,

  • வரவேற்பு மற்றும் பேச்சாளர்கள் அறிமுகம்: ஜீவ கரிகாலன்
  • கதை நிகழ்த்துதல் - TCU பற்றிய அறிமுகம்
  • காமிக்ஸ் மற்றும் கிராபிஃக் நாவல்கள் பற்றிய ஒரு அறிமுகம்
  • தலைமையுரை : ஓவியர் திரு மருது அவர்கள்
  • உங்கள் வாழ்நாளில் நீங்கள் தவறாமல் படிக்க வேண்டிய கிராபிஃக் நாவல்கள் பற்றிய ஒரு விவாதம்
  • கிங் விஸ்வா (நிறைவுரை -கதை நிகழ்த்துதல்)
  • நன்றியுரை - யாவரும்.காம் ஜீவ கரிகாலன்
என்று அட்டகாசமாக திட்டமிடப்பட்டுள்ளது. உங்கள் இலக்கிய வாசிப்பில் ஒரு திருப்புமுனையை நிகழ்த்த இருக்கும் இந்நிகழ்ச்சியை மறந்து விடாதீர்கள். மறந்தும் இருந்து விடாதீர்கள்.
இரசனை, வாசிப்பு குறித்தான உங்கள் பார்வையை மாற்ற உதவும் ஒரு நிகழ்வு இது.

என்னுடைய வாசகர் வட்டம் மற்றும் விமர்சகர் வட்ட நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.

No comments:

Post a Comment