1995ஆம் ஆண்டு. ஒரு புதிய ஓவியர் தன்னுடைய காமிக்ஸ் / கிராபிஃக் நாவலை வெளியிடுகிறார். புதிய படைப்பாளி, அதிகம் பரிச்சயமில்லாத பதிப்பகம், எந்தவிதமான விளம்பரமும் இல்லாத சூழல் என்று பல தடைகள் இருந்தாலும் அந்த புத்தகம் பேசப்பட்டது. இரண்டு ஆண்டுகள் கழித்து அதே கதாசிரியரின் அடுத்த படைப்பு வெளியானபோது அமெரிக்காவே இவரை திரும்ப பார்த்தது. ஆனால் தன் மீது படிந்த அந்த புகழ் வெளிச்சத்தை நாடாமல் திடீரென காமிக்ஸ் துறையில் இருந்து விலகி தனக்கு பிடித்தமான பச்சை குத்துவதை தொடர சென்று விட்டார்.
அடுத்து பல ஆண்டுகளில் காமிக்ஸ் ரசிகர்களுக்கு அவரும், அவரது இரண்டு படைப்புகளுமே பல மழைக்கால மாலைநேரங்களின் விவாதப்பொருளாக இருந்து வந்தது. புகழின் உச்சத்தை நோக்கிய பயணத்தை ஆரம்பத்திலேயே முடித்துக்கொண்ட அந்த கதாசிரியர் சுமார் 17 ஆண்டுகள் கழித்து மறுபடியும் திரும்ப வந்து ஒரு கிராபிஃக் நாவலை படைக்கிறார் என்றால் அதன்மீதான ஆர்வம் எப்படி இருக்கும்? அல்லது அவரை திரும்ப வரவழைத்த அளவுக்கு அந்த கதை எப்படிப்பட்டதாக இருக்கும்?
- யார் அந்த படைப்பாளி?
- ஐஸ்னர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட அவரது கிராபிஃக் நாவலின் பெயர் என்ன?
- இந்த நாவலில் இவர் செய்த புதுமை என்ன?
- உலகமே பேச தயங்கிய காமிக்ஸ் அரசியலை இவர் எப்படி தைரியமாக முன்வைத்தார்?
இவருடனான உரையாடலில் இவர் தெரிவித்த கருத்துக்களை முன்வைத்து எழுதப்பட்ட இந்த நான்கு பக்க விமர்சனம் இம்மாத குமுதம் தீராநதி இதழில் வெளிவந்துள்ளது.
படித்துவிட்டு உங்களது கருத்துக்களை தெரிவிக்க மறந்துவிடாதீர்கள்.
No comments:
Post a Comment